நவதானிய தோசை
என்னென்ன தேவை? பாசிப்பயறு - 1/4 கப், கருப்பு உளுத்தம்பருப்பு - 1/4 கப், கொண்டைக்கடலை - 1/4 கப், பச்சரிசி - 1/4 கப், துவரம்பருப்பு - 1/4 கப், கொள்ளு - 1/4 கப், சோயா - 1/4 கப், வெள்ளை சோளம் - 1/4 கப், எள்ளு - 1 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 3, காய்ந்தமிளகாய் - 6, இஞ்சி - 1 துண்டு, தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது.
எப்படிச் செய்வது? எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் தண்ணீரை வடித்து தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், காய்ந்தமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையை சேர்த்து மெல்லிய தோசைகளாக வார்த்தெடுத்து சூடாக பரிமாறவும்.
|