நியூஸ் பைட்ஸ்



நிதி ஆயோக் சுகாதார அறிக்கை தமிழ்நாடு இரண்டாம் இடம்

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையின்படி, 2019-2020ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களின் தர வரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில்  கேரள மாநிலம் முதல் இடத்தையும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும், உத்தரப்பிரதேசம் கடைசி இடத்தையும் பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடைசிக்கு முந்தய இரு இடங்களையும் பிடித்துள்ளன.

கலிபோர்னியாவில் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள்

கலிபோர்னியாவில், இரட்டை குழந்தைகளில் ஒன்று புத்தாண்டின் போது டிசம்பர் 31, 2021 அன்று இரவு 11:45 மணிக்கும் மற்றொரு குழந்தை பதினைந்து நிமிட இடை
வெளியில் ஜனவரி 1, 2022 அன்றும் பிறந்து சாதனை படைத்துள்ளன. இது போல இரட்டை குழந்தைகள் வெவ்வேறு வருடங்களில் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு மாதங்களில் பிறப்பது மிகவும் அரிது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாயின் சாதி அடிப்படையில் குழந்தைகளுக்கு முதல் முறையாக சான்றிதழ்

தாயின் சாதியின் அடிப்படையில் முதல் முறையாக சாதிச் சான்றிதழை தில்லி அரசு வழங்கியுள்ளது. பொதுவாக தந்தையின் பெயரிலோ அல்லது குடும்பத்திலிருக்கும் வேறொரு ஆணின் பெயரிலோதான் சாதிச் சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் 2020ல் திருத்தப்பட்ட அரசாங்கச் சட்டத்தின்படி, விவாகரத்தான பெண்கள்/ கணவனை இழந்த பெண்கள்/ஒற்றை தாயாக குழந்தையை வளர்க்கும் பெண்கள், SC/ST சாதிச் சான்றிதழ்களை தங்கள் பெயரில், தங்கள் சாதியில் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் சான்றிதழ் 2022ல் தில்லி அரசால் கீதா தேவி என்ற பெண்ணின் குழந்தைக்கு வழங்கப்பட்டுள்ளது.

புல்லி பாய் செயலியை உருவாக்கிய இளைஞர்கள் கைது

ஜனவரி 1ல், புல்லி பாய் எனும் செயலியில் பெண் பத்திரிகையாளர்கள், இஸ்லாமிய பெண்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கும் அதிகமான பெண்களின் புகைப்படங்களை பதிவு செய்து அந்த செயலியில் அவர்களை ஏலம் விடும் அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இந்த செயலியின் தயாரிப்பாளர்களை போலீசார் சமீபத்தில் கைது செய்து வருகின்றனர். அதில் கைதாகிய இளைஞர்கள் அனைவருமே 21 வயதுக்குட்பட்டவர்கள். அதில் 18 வயது பெண்ணும் கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் இளம் தலைமுறையினர் இப்படிப்பட்ட வன்மச் செயலில் ஈடுபடுவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசி, மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம்!

கொரோனா தொற்றுநோய் தடுப்பூசிகள், மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறதா எனும் ஆராய்ச்சி அமெரிக்காவில் 4000 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டது. Oregon Health and Science University சார்பாக, தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பெண்கள் என இரு பிரிவினரை சுமார் 6 மாதங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்கள் தற்காலிக மாதவிடாய் சுழற்சி மாற்றத்தை சந்திப்பதாகவும், அவர்களுடைய மாதவிடாய் சுமார் 19 மணி நேரம் முதல் இரண்டு நாட்கள் வரை தள்ளிப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மீண்டு இரண்டு மாதத்தில் பழைய நிலை சுழற்சிக்கு திரும்புவதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பட்டனை தட்டினால் நிறம் மாறும் கார்கள்

உலகின் முதல் நிறம் மாறும் காரை, பி.எம்.டபிள்யூ அறிமுகம் செய்யவுள்ளது. பி.எம்.டபிள்யூ 9 ஃப்ளோ எனும் பெயரில் அறிமுகமாகவுள்ள இந்த கார் இ-இங்க் தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு பட்டனை தட்டினால், விருப்பத்திற்கேற்ப காரின் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

நாக்கில் எச்சில் ஊற வைக்கும் பீமா ஊறுகாய்!

சாம்பார் சாதம், தயிர் சாதம், ஏன் பிரியாணியாக கூட இருந்தாலும் ஒரு ஸ்பூன் ஊறுகாய் இருந்தால் எக்ஸ்ட்ரா ஒரு கவளம் சாப்பாடு உள்ளே இறங்கும். சாப்பாட்டிற்கு மேலும் சுவைக்கூட்டும் வகையில் ராஜ சுவையுடன் உருவாக்கப்பட்டதுதான் கவின்கேர் நிறுவனத்தின் தரமான தயாரிப்பான பீமா ஊறுகாய். மற்ற ஊறுகாய்களைவிட இதன் சுவையும் தரமும் ஒருபடி மேலே என்று தான் சொல்ல வேண்டும். உணவை விரும்புபவர்களான ஃபுட்டி என்ற பட்டியலில் இருப்பவர்கள் அனைவருக்கும் பீமா ஊறுகாய் நிச்சயமாக பிடிக்கும்.

காரணம் இதில் உள்ள அனைத்து மூலப்பொருட்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்தரமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஊறுகாயின் தனிச்சிறப்பே அதில் உள்ள புளிப்பு, உப்பு மற்றும் காரச்சுவை தான். இதில் அனைத்து சுவைகளும் சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டு முறையாக தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு கவள உணவினை உண்ணும் போதும் அது அலாதியான சுவையினை அளிக்கும் என்பதற்கு நிகர் பீமா ஊறுகாய் என்பதில் சந்தேகமில்லை. இது இல்லாமல் எந்த உணவும் முழுமையடையாது.

ஊறுகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், நமது ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, நமது செரிமானத்தை மேம்படுத்தி, திசுக்களுக்கு ஏற்படும் தாக்கங்களில் இருந்து நம் உடலை காப்பாற்ற உதவுகிறது. தற்போது பீமா ஊறுகாய்  கீழ்க்கண்ட சுவைகளில் கிடைக்கிறது:

* ஆந்திரா ஆவக்காய், * ஆந்திரா கோங்குரா,
* நறுக்கிய மாங்காய், * மாங்காய் தொக்கு,
* எலுமிச்சை, * காய்கறி  கலவை, * சிவப்பு மிளகாய்,
* தக்காளி பூண்டு.

சுவையான உணவை சந்தோஷமாக சாப்பிடுவது என்பது  உடல்நலத்தையும் மன நலத்தையும் சிறப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உணவிற்கு மேலும் சுவைகூட்டி உங்களை ஒவ்வொரு முறையும் உணவை மகிழ்ச்சியோடு உட்கொண்டு, சிறந்த ஆரோக்கியதோடு திகழ்ந்திட பீமா ஊறுகாய் வகை செய்கிறது.இன்றே பீமா ஊறுகாய் வாங்கி ராஜ சுவையை அனுபவித்திடுங்கள். 
             
- ரிதி

ஸ்வேதா கண்ணன்