கிச்சன் டிப்ஸ்...



*    மில்க் கிரீமிலிருந்து வெண்ணெயை பிரித்து எடுத்த பிறகு எஞ்சியிருக்கும் மில்க் கிரீமுடன் சிறிதளவு பாலை சேர்த்து கொதிக்க  வைத்தால் மென்மையான பனீர் கிடைக்கும்.
*    பச்சை பட்டாணிகளை வேக வைக்கும்போது சிறிதளவு வினிகர் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்.
*    தேங்காய்பால் எடுத்து உணவு தயாரிக்கும்போது பிழிந்து வைத்த தேங்காய்பால் திரிந்து போகாமல் இருக்க சிறிதளவு தண்ணீரில்  மக்காச்சோள மாவை கலக்கி அதில் ஊற்றி வையுங்கள்.
- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

*    கோதுமையுடன் சமஅளவு அரிசி, கேழ்வரகு சேர்த்து அரைத்து அடை செய்தாலும், களி செய்தாலும் சுவையாக இருக்கும்.
*    கற்பூரவல்லி இலைகளை பருப்புடன் சேர்த்து கடைந்து சாம்பார் செய்தாலும் சுவையாக இருக்கும்.
- சு.கண்ணகி, மிட்டூர்.

*    பெருங்காயம் கட்டியாகி விட்டதா...? அதில் இரண்டு பச்சைமிளகாயை போட்டு வையுங்கள். இளகிவிடும்.
*    மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராது. நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
- எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.

*    மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். சுவையும் நன்றாக இருக்கும்.
*    இஞ்சியை ஈரமணலில் புதைத்து வைத்தால் வாடாமல், வதங்காமல் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்.
- க.நாகமுத்து, திண்டுக்கல்.

*    லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது. நாற்றம் அடிக்காது.
- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

*    பனீரைத் தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்தபிறகு பயன்படுத்த எடுக்கும்போது பனீர் மிகவும் கெட்டியாக இருக்கும். இதை அப்படியே  பயன்படுத்தக் கூடாது. ஒரு ‘கப்’பில் தண்ணீர் எடுத்து அதில் பனீரை வெட்டாமல் முழுதாகப் போட்டு 5 நிமிடம் சென்றதும் எடுத்து  பயன்படுத்தினால் பனீர் மிருதுவாக இருக்கும்.
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.

*    ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது தேங்காய்த் தண்ணீர் சேருங்கள். மறுநாள் மாவு பொங்கி இருக்கும். அதில் அரை கப்  லேசான சுடுபால் சேர்த்து விட்டுப் பின்பு ஆப்பம் சுடத் தொடங்குங்கள். ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்.
*    தக்காளி சாஸ் தயாரிக்கும்போது அதன் இயற்கையான நிறம் மாறாமல் இருக்க வேண்டுமானால் அடுப்பில் இருந்து சாஸை  இறக்கிய பின்பு தான் உப்பு சேர்க்க வேண்டும்.
*    இன்ஸ்டன்ட் குலோப்ஜாமூன் மாவு வாங்கி தயாரிக்கும்போது மாவில் சிறிதளவு வெண்ணெய் சேருங்கள். குலோப்ஜாமூன் அதிக  மென்மையாக இருக்கும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.