வைரல் சம்பவம்



இணைய உலகில் பிரபலமான பெயர் நாராயண ரெட்டி. தெலங்கானாவைச் சேர்ந்த இவர் ‘யூடியூப் தாத்தா’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். இவரது ‘கிராண்ட்பா கிச்சன்’ என்ற சேனலுக்கு 60 லட்சம் சந்தாதாரர்கள். விதவிதமாக சமைத்து அசத்தும் இவரது வீடியோ பதிவுகளுக்கு உலகெங்கும் ரசிகர்கள்.

இந்த வீடியோக்கள் மூலம் ஈட்டும் வருமானத்தில் ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளுக்கு உணவளித்து வந்த நாராயண ரெட்டி கடந்த அக்டோபரில் இறந்துவிட்டார். இன்று அவரது குடும்பத்தினர் கிராண்டா கிச்சனை கையில் எடுத்து நாராயண ரெட்டியின் சேவையைத் தொடர ஆரம்பித்திருப்பது வைரலாகிவிட்டது.