புத்தாண்டு கொண்டாட்டம்



இன்னும் ஒரு மாதத்தில் புது வருடம் பிறக்கப்போகிறது. பொதுவாக பட்டாசு வெடித்து ஜாலியாக புத்தாண்டைக் கொண்டாடுவார்கள். ஆனால்,  சில நாடுகளில் வித்தியாசமான முறையில் புத்தாண்டை வரவேற்கிறார்கள். அவற்றைப் பார்ப்போம்.

ஸ்காட்லாந்து

கிறிஸ்துமஸ் முடிந்த இரண்டாவது நாளிலிருந்தே புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகி விடும். ஒரு பாரம்பரிய திருவிழாவைப் போல ஐந்து நாட்களுக்கு புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள் ஸ்காட்லாந்து மக்கள். 

போர் வீரர்களைப் போல உடை அணிந்துகொண்டு கையில் தீப்பந்தத்தை ஏந்தி தெருவில் ஊர்வலம் வருவது இதில் சிறப்பு. இப்படி நெருப்பைச் சுழற்றிவரு வதால் தீய சக்திகள் விரட்டியடிக்கப்படும் என்று ஸ்காட்லாந்து மக்கள் நம்புகிறார்கள்.

ருமேனியா

புத்தாண்டு அன்று ருமேனியா விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளிடம் பேச்சுக் கொடுப்பார்கள். விவசாயிகள் பேசியதற்கு பதில் அளிப்பதைப் போல கால்நடைகள் சத்தம் எழுப்பினால் நல்ல சகுனமாம். இதுபோக நாணயங்களை ஆற்றில் வீசுவார்கள். வீடுவீடாக சென்று நடனமாடி இசைக்கருவிகளை இசைப்பது ருமேனி யர்களின் வழக்கம்.
 
சிலி

காலி சூட்கேஸை எடுத்துக்கொண்டு தெருத் தெருவாக நடப்பார்கள் சிலி மக்கள். புத்தாண்டு அன்று அப்படி நடப்பதால் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கான அதிர்ஷ்டம் அடிக்குமாம். இப்படி வேகமாக நடப்பவர்கள், தொலை தூரம் பயணம் செய்வார்கள் என்பது சிலி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
 
தென்னாப்பிரிக்கா

ஜோகன்ஸ்பர்க் நகரில் வீட்டிலுள்ள பழைய மரச்சா மான்களை, பாத்திரங்களை, துணிகளை வெளியே வீசு வது புத்தாண்டு வழக்கம். இப்படிச் செய்வதால் பழைய விஷயங்கள் அழிந்து புதியன புகும் என்பது அவர்களது நம்பிக்கை. இதற்கு தடைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தாலும் பர்னிச்சரை உடைப் பதை தென்னாப்பிரிக்க மக்கள் இன்னும் கைவிடவில்லை.