வைரல் சம்பவம்



உத்தரப்பிரதேசத்தின் பாண்டா நகரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்துக்குள் நுழைந்தால் விநோதமான காட்சிகள் நம்மை வரவேற்கின்றன. ஆம்; இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து நாம் பார்த்திருப்போம். ஆனால், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எல்லாரும் ஹெல்மெட் அணிந்து வேலை செய்கிறார்கள்.

காரணம், அலுவலகக் கட்டடம் பாழடைந்து இடிந்துபோகும் நிலையில் உள்ளது. எவ்வளவு கோரிக்கை வைத்தும் சரி செய்ய அரசு முன்வரவில்லை.  அதனாலேயே ஹெல்மெட் அணிந்திருக்கிறார்கள் அந்த ஊழியர்கள். இந்த விநோத காட்சி புகைப்படமாக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி வைரலாகிவிட்டது.