கல்லறை



போர் மற்றும் கலவரப்பகுதிகளில் ஏராளமான அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். கடந்த வருடம் மட்டும் மூவாயிரத்துக்கும் மேலான குழந்தைகள் போர் நிகழ்ந்த பகுதிகளில் கொல்லப்பட்டுள்ளனர்.
இதைத் தடுக்கும் விதமாகவும், இது பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாகவும் ‘யுனிசெஃப்’ நிறுவனம், நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபையின் முன் ஆயிரக்கணக்கான ஸ்கூல் பேக்குகளை கல்லறை போல நிறுவியுள்ளது.