இட நெருக்கடி



அமெரிக்க கட்டடக் கலைஞர்கள் வடி வமைத்த எதிர்கால நகரங்களின் புளூபிரின்ட் இது. இன்னும் 30 வருடங்களில் உலகின் மக்கள் தொகை 980 கோடியைத் தொட்டுவிடும்.
இதில் 650 கோடிக்கும் அதிகமானோர் நகரங்களை நாடிச் செல்வார்கள் என்பதால் இட நெருக்கடி அதிகரிக்கும். அதனால் மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப நகரத்தை வடி வமைப்பது முக்கியம் என்று சொல்லி வருகின்றனர் கட்டடக் கலை நிபுணர்கள்.