ஏன் கொட்டாவி விடுகிறோம்?



ஏன்? எதற்கு? எப்படி?

நம் வாழ்நாளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தடவை கொட்டாவி விடுகிறோம். இதனால் தான் கொட்டாவி விடுகிறோம் என்று அறிவியலால் கூட உறுதியாகச் சொல்ல முடியாத நிலை. இருந்தபோதிலும் கொட்டாவிக்கான காரணங்களை நிபுணர்கள் அடுக்குகிறார்கள். முதலில் என்ன மாதிரியான சூழலில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து கொட்டாவி வருகிறது. நம்முடைய உடல் சோர்வாக அல்லது சலிப்பாக இருக்கும்போது மூளையின் வெப்பநிலை உயரும்.

அப்போது நமக்கு கொட்டாவி வரும். தவிர, அடைக்கப்பட்ட அறைக்குள் நீண்ட நேரம் இருக்கும்போது  குளிர்ந்த காற்றை சுவாசிக்கிறோம். அப்போது மூளை குளுமை அடைந்து நமக்கு கொட்டாவி வரும். ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்க்கும்போது நமக்கும் கொட்டாவி வருகிறது. தவிர, விலங்குகளுக்கும் கொட்டாவி விடும் பழக்கம் உண்டு. இதைப் படிக்கும்போது நீங்களும் கொட்டாவி விடலாம்.