கடலுக்கடியில் சுரங்கப்பாதை



ராட்சத பனிப்பாறைகளும், ஆயிரக்கணக்கான கழிமுகங்களும், அழகழகான மலைகளும், நூற்றுக்கணக்கான நீர்நிலைகளும் சூழ்ந்த ஓர் ஆச்சர்ய நிலப்பகுதி நார்வே. 53 லட்சம் பேர் வாழும் இந்நாட்டில் சாலைப் போக்குவரத்து என்பது சற்று சிக்கலானது. காரணம், மேலும் கீழுமான அதன்  நிலப்பகுதிகளும், குறுக்கும் நெடுக்குமாக ஓடும் அதன் ஆறுகளும்தான்.

காரில் 100 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கவே மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஆகும். அதனால் மக்கள் படகுப் பயணத்தையே பெரிதும் விரும்பு கின்றனர். இந்நிலையில் கடலுக்கடியில் கான்கிரீட்டில் சுரங்கப்பாதை அமைத்து போக்குவரத்தை நவீனமாக்கப் போகிறது நார்வே.
இதற்கான பட்ஜெட் மட்டுமே 40 பில்லியன் டாலர்கள்.  2050-க்குள் இந்தப் பாதையை மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற இலக்கில் முழுமூச்சாக இயங்கிவருகிறது நார்வே.