மக்கள்தொகை கட்டுப்பாடு மனித உரிமை மீறலா?



உங்களுக்கு எத்தனை குழந்தைகள் சார்? என்று நண்பர்கள் கேட்டாலே சங்கடம். கேள்வியை அரசு கேட்டால் மக்களுக்கு பயத்தில் வயிற்றை பிசையுமா இல்லையா? சீனா தன் நாட்டில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை பாலிசியை அமுல்படுத்தியதன் விளைவாக இன்று 30 மில்லியன் ஆண்கள் அங்கு உள்ளனர்.  மேற்குலகின் குடும்பக் கட்டுப்பாடு பாலிசியை சீனா அமுல் படுத்தி, 2 குழந்தைகள் பெற்றால் அபராதம், கருக்கலைப்பு ஆதாரங்கள், ரகசியமாக குழந்தை வளர்த்தால் தண்டனை என தீவிரம் காட்டியது.

விளைவு? பெருசுகளின் எண்ணிக்கை சீனாவில் உயரத்தொடங்கியது. இதனைத் தவிர்க்க இரு குழந்தைகள் பாலிசியை 2015 ஆம் ஆண்டு சீன அரசு அமுல்படுத்தியும் பயனில்லை. மக்கள்தொகை கட்டுப்பாடு, உணவுத் தேவை யை, இயற்கை வளங்களை மையமாகக் கொண்டது என உலக நாடுகள்  மக்களை நம்பவைக்கின்றன.  

1970-2010 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மனிதர்களால் 76% கானுயிர்கள் அழிக்கப்பட்டது என உலக கானுயிர் நிதியகம்(WWF) அறிக்கை கூறியுள்ளது. “கல்வியறிவு கொண்ட பெண்கள், குறைவாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வார்கள் என்கிற எழுத்தாளர் லைஹோங் ஷியின் கருத்து மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளைப் போலவே புரிந்துகொள்ள சிக்கலானது.