மறக்கப்பட்ட கருப்பின வீரர்கள்!



முதலாம் உலகப்போரின் 100 வது ஆண்டு. அமெரிக்க ஜெனரல் ஜான் பெர்ஸிங், 1,500 அமெரிக்க வீரர்கள், பிரான்சு படையில் இணைந்து போரிட்டதற்கு பெருமைப்படுகிறார். ஆனால் இப்போரில் பங்கேற்ற 3 லட்சத்து 80 ஆயிரம் ஆப்பிரிக்க- அமெரிக்க வீரர்களின் பங்களிப்பை அமெரிக்க அரசு பேசவேயில்லை.  

“அமெரிக்க ராணுவத்தில் கடைப்பிடிக்கப்படும் நிறவெறி யால் கருப்பின வீரர்களின் நினைவுகளை மக்களிடமிருந்து அழிக்கவே ராணுவம் முயற்சித்து வருகிறது” என்கிறார் அமெரிக்காவின் பிராண்டெய்ஸ் பல்கலையில் ஆப்பிரிக்க-அமெரிக்க வரலாற்றுப் பேராசிரியரான சாட் வில்லியம்ஸ்.  

“உலகம் ஜனநாயகத்திற்கேற்றதாக இருப்பது அவசியம்” என்று உரையாற்றிய அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் 1917 ஆம் ஆண்டு போர் அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்காவில் இனவெறுப்புக்குள்ளான கருப்பின வீரர்கள் வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கையில் ராணுவத்தில் சேர்ந்தனர்.

முதலில் அனுமதிக்காதவர்கள் வீரர்கள் பற்றாக் குறையால் அமெரிக்க அரசின் சட்டம் மூலமாக கருப்பினத்தவரை சேர்த்தனர். பலருக்கு சமையல் சுகாதாரப் பணிகளை தந்தாலும் சில பிரிவுகளுக்கு ராணுவப்பணி தரப்பட்டது. தம் உரிமைகளைக் கேட்ட கருப்பின வீரர்கள் 1919 ஆம் ஆண்டு படுகொலையான நிகழ்வும் நடந்தேறியது.