தெருவணிகம்!



இந்தியாவின் போக்குவரத்து சிக்னல்களில் நடைபெறும் வணிகம் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்து வருகிறது.  இந்தியாவிலுள்ள பிச்சைக்காரர்களின் தோராய எண்ணிக்கை- 4,13, 670.  மொத்த மக்கள்தொகையில் தெருவணிகர்களின் எண்ணிக்கை 2.5%, நகரிலுள்ள ஏழைகள் அளவு 35%, பொருட்களை விற்கும்  குழந்தைகள்- 0.4%.(பழங்குடிகள்-16.7%,ஓபிசி-38%)  இந்தியாவில் ஆண்டுதோறும் 5-6 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.  

தேசியக்கொடிகளை மொத்த மார்க்கெட்டில் வாங்குகின்றனர். ஒரு பீஸின் விலை ரூ.200. இதனை ஒரு பீஸுக்கு ரூ. 250-275 என கமிஷன் பத்து சதவிகிதம் வைத்து தெருவணிகர்களிடம் கொடுக்கின்றனர். தினசரி 20-250 ரூபாய் சம்பளத்தில் வாடிக்கையாளர் களிடம் ஒரு தேசியக்
கொடியை ரூ.400-500 க்கு விற்கின்றனர்.

தெருவணிகத்தில் இறங்கு பவர்கள் பெரும்பாலும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களே. டெல்லியில் பொம்மைகள், டிஷ்யூபேப்பர்கள், ஊதுபத்திகள் (ராஜஸ்தான் குழு), புத்தகங்கள், பொம்மைகள் (ஜார்க்கண்ட், பீகார்), பூக்கள், பொம்மைகள் (ராஜஸ்தான், உ.பி).  டெல்லி  உயர்நீதிமன்றம் பிச்சை எடுப்பது குற்றமல்ல என்று கூறியிருப்பதால் தெரு வணிகம் உச்சம் தொடலாம். கான்ட்ராக்டர்கள் மூலம் சிக்னலில் பொருட்களை விற்கும் தெருவணிகர்கள் தினசரி தோராயமாக ரூ.600-1000 வரை சம்பாதிக்கின்றனர்.
(World economic forum report 2017,Census 2011 தகவல்படி)