பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் இரும்பு!



இயற்கையில் விலங்கு, மனிதர்களின் உடம்பில் மறைந்திருந்து நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது  தாக்குவதில் பாக்டீரியா, வைரஸ்களுக்கு பேதம் கிடையாது. இதில் நம் குடலில் காணப்படும் இ-கோலி (Escherichia coli ) பாக்டீரியாக்கள் முன்னணி வகிக்கின்றன. இவை சிறுநீரகத்தொற்று, வயிற்றுப்போக்கு, குடல் அழற்சி ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

சவுத் டகோடா பல்கலைக்கழக மாணவர் பெங் டாய், கழிவு இரும்புகள் மூலம் இ-கோலி பாக்டீரியாவை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வில் கண்டறிந்துள்ளார். 2 மில்லிமீட்டர் சுற்றளவு கொண்ட இரும்பு, பாக்டீரியாக்களை அழித்து வளர்ச்சியை கட்டுப்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரும்பு ஆக்ஸைடின் pH அளவு குறைந்தும், அதிகரித்த நிலையிலும் பாக்டீரியாக் களின் வளர்ச்சி குறைந்துள்ளது ஆராய்ச்சியின் ஸ்பெஷல்.  இ-கோலி பாக்டீரியா உயிரியல் ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிற ஒன்று.