யார் இந்தியர்கள்?



2014 ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கிய மோடி, மேற்கு வங்காளத்தின் செரம் பூரில் “மே 2016க்குப் பிறகு வங்கதேச அகதி மக்கள் கிளம்பத் தயாராக இருங்கள்” என்று பேசினார். நாடு, வீடு, இனம் காப்பதற்கான உறுதிமொழியை 2016 ஆம் ஆண்டு சொன்ன பாஜக அரசு, உருவாக்கிய குடியுரிமை சட்ட மசோதா அசாமில்  சர்ச்சையாகியுள்ளது.  

2016 ஆம் ஆண்டு ஜூலையில் அறிமுகமான குடியுரிமை சட்டம் இந்து, சீக்கியர், கிறிஸ்தவர், ஜெயின், பௌத்தர் ஆகியோரையும், டிச.31, 2014 தேதிக்கு முன் இந்தியாவில் அடைக்கலமானவர்களையும் இந்தியர்களாக அங்கீகரிக்கிறது. சட்டவிரோத அகதி களுக்கும் குடிமக்கள் அந்தஸ்து வழங்குவது அசாம் மாநில மக்களால் வரவேற்கப்படவில்லை.

இது அரசியலமைப்பின் 14 ஆவது பிரிவை மீறியது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். நோ பார்க்கிங்கில் வண்டி நிறுத்தியதற்காக ஃபைன் கட்டியிருந்தாலும்கூட குடியுரிமையை அரசு ரத்து செய்யலாம் என்ற அரிய ஷரத்துகள்  இம்மசோதாவில் உள்ளன. அசாமில் பாஜகவின் கூட் டணிக்கட்சியான அசோம் கன பரிஷத்  இச்சட்டத்தை தீவிரமாக எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருகிறது.