பல முக மன்னர்கள்!



வரலாற்று சுவாரசியங்கள் 8

1815 ஆம் ஆண்டு பிறந்த எட்வர்டு சிம்சன் (ஃபிளின்ட் ஜாக்), இங்கிலாந்தின் யார்க்‌ஷையர் வாரிசு. தன் பதினான்கு வயதில்  வரலாற்றுப் பேராசிரியர் ஜார்ஜ் யங்கிடம் வேலைக்குச் சேர்ந்த ஜாக், அவருடன் சேர்ந்து பல்வேறு அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டார். திடீரென பயணம் சென்று காட்டுக்குள் கூடாரம் போட்டு தேடுதல் வேட்டை நடத்துவது ஜார்ஜ் யங்கின் வழக்கம்.

1843ம் ஆண்டில் டாக்டருக்குப் பின் அவரின் தொழிலுக்கு வாரிசாக மாறினார் ஜாக். பல கலைப்பொருட்களைக் கண்டுபிடித்து வியாபாரம் செய்யத்தொடங்கினார்  ஜாக்.  அப்போது உடைந்த அம்பு முனையைக் கொண்டுவந்த  வியாபாரி ஒருவர். அதைப்போலவே மற்றொன்று செய்து தரமுடியுமா? என்று கேட்டார்.  

சிம்சன் செய்த போலி அம்பு கச்சிதமாகவும் ஒரிஜினலைப் போலவும் இருந்தது. பின் பழங்கால மண்ஜாடிகளை போலியாகச் செய்து பழையது என விற்கத் தொடங்கினார் ஜாக். பானைகள், எழுத்துக்களைக் கொண்ட கற்கள், எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், போர்க்கருவிகள் என டஜன் கணக்கில் தயாரித்து விற்றார். ஜாக்.

திடீரென தொற்றிய குடிப்பழக்கம் ஜாக்கை பிச்சை எடுக்கும் நிலைக் குத் தள்ளியது. 1861 ஆம் ஆண்டு லண்டனில் அருங் காட்சி குறித்த மேடையில் அலங்கோலமான  உடையில் தோன்றி, எப்படி தொன்மையான பொருட்களை செய்வது ஆன் தி ஸ்பாட் லெக்சர் கொடுக்க, அவரை கீழிறங்கச் சொல்லி முதலில் அலறிய மொத்த கூட்டமும் வாய்பொத்தி அவர் சொன்னதை ரசித்துக் கேட்ட மேஜிக் நடந்தது. பின் 1866 ஆம் ஆண்டு திருட்டுக் குற்றத்திற்காக சிறை சென்று இறந்து  போனார் ஜாக். 

யார் நீ? -வால்டோ டெமாரா 1921 ஆம் ஆண்டு மசாசூசெட்சில் பிறந்த வால்டோ, பால்யத்திலேயே கத்தோலிக்க மடத்தில் சேர்ந்தார். அங்கே கட்டுப்பாடுகளால் தடுமாறிய வால்டோ, பாஸ்டனில் இருந்த மடத்திற்குச் சென்றார். பின் ராணுவத்தில் சேர்ந்தவர்,  அங்கிருந்த பிற வீரர்களின் பொருட்களை சுட்டு ஜூட் விட்டார்.  

1941 ஆம் ஆண்டு கடற்படையில் சேர்ந்தவர், அங்கு  வேலை  செய்யாமல்  டிமிக்கி  கொடுத்து,  மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பம் அனுப்பினார். அடிப்படைக் கல்வி இல்லாமல் மருத்துவர் ஆவது எப்படி? மருத்துவரின் முகவரி லிஸ்ட்டை எடுத்து சா பூ த்ரீ போட்டு டாக்டரை செலக்ட் செய்து யுனிவர்சிட்டியிலிருந்து அவரின் டாகுமென்ட்ஸைப் பெற்று அதில் டகால்டியாக தன் பெயரை புகுத்தினார். அப்புறமென்ன, நேவி கமிஷனுக்கு வேலைக்கு அப்ளை செய்தார். பின் அங்கே சந்தேகம் கிளம்ப, லெட்டர் எழுதி வைத்துவிட்டு எஸ்கேப்பானார்.
 
பின் கென்டக்கியிலிருந்த லேடீஸ்  கான்வென்டில் டாக்டர் ராபர்ட் பிரெஞ்ச் என்ற பெயரில்  வேலை பார்த்தார்.  ஆசிரியர் பணியோடு சுபியாக் தேவாலய பணியிலும் ஈடுபட அழைப்பு வந்தது வால்டோவுக்கு நெருக்கடியானது. கொடுத்த டூப்  சர்டிஃபிகேட்டின்  உண்மை பாதிரியாருக்குத் தெரியவர நடுத்தெருவே கதி. பின் ஜெகஜ்ஜால வேலை காட்டி கேனன் கல்லூரியில் தத்துவப் படிப்பில் டீன் ஆனார்.

கடற்படையில் அனுப்பிய ரெக்கார்டு கள் சிக்கலாக, ஆறு ஆண்டு சிறைத்தண்டனை வால்டோவுக்கு விதிக்கப்பட்டது. விடுதலையான வால்டோ ஜோசப் சைபர் என்ற சர்ஜனாக மூன்று வீரர்களையும் ஆபரேஷனில் காப்பாற்றினார். ஒரிஜினல் டாக்டர் மூலம் உண்மை வெளியாக, வேலை போனது. பின்னர் ஆசிரியராகி மதபோதகராகி 61 வயதில் (1982) இறந்துபோனார் வால்டோ.

(அறிவோம்...)