அன்டார்டிகா அல்லது ஐஸ்லாந்தில் பனி உருகியபிறகு அங்கு குடியேறமுடியுமா?



ஏன்? எதற்கு? எப்படி?

அப்படி தங்க பல்லாண்டுகள் தேவை. அன்டார்டிகா மற்றும் ஐஸ்லாந்தில் உள்ள ஐஸ் கட்டிகள் உருகினால் கடல்மட்டம் 68 மீட்டர் உயரும். இதன்விளைவாக ஐரோப்பாவின் பெரும்பாலான இடங்கள் நீருக்குள் நீச்சலடித்துக் கொண்டிருக்கும். கூடவே ஆசியா, கனடா, தென் அமெரிக்காவின் பலபகுதிகளும் நீருக்குள் பத்திரமாக இருக்கும்.

தற்போது ஐஸ்லாந்து மற்றும் அன்டார்டிகாவின் மேலுள்ள ஐஸ்கட்டிகள் உருகி கீழே வந்துகொண்டிருக்கின்றன. பனிக்கட்டிகள் உருகிவிட்டால் நீரிருந்த பரப்பு மக்கள் வாழும் இடமாக பல நூறு ஆண்டுகள் தேவை.

அன்டார்டிகா ஆஸ்திரேலியா போலவும், ஐஸ்லாந்து குவளை போன்றிருப்பதாலும் தங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் அன்டார்டிகாவுக்கு, காசாகிராண்டே போலவெல்லாம் ரியல் எஸ்டேட் விளம்பரம் கொடுக்கும்படி கிராக்கி வராது என நம்புவோம்.

Mr.ரோனி