விமானிகளைத் தாக்கும் ஹைபோக்ஸியா!
விமானிகள் எமர்ஜென்சி நேரத்தில் செய்யவேண்டிய விஷயங்கள் மறந்துபோக, சுயநினைவிழந்து தன் உயிரைப் பாதுகாக்கவே தடுமாறுகிற பிரச்னைக்கு என்ன காரணம்? மூளைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காததே முக்கிய காரணம்.
இந்நிலைக்கு ஹைபோக்ஸியா என்று பெயர். ஆக்சிஜன் சிலிண்டரின் பிரஷர் மாறினாலும், ஆக்சிஜன் ட்யூபில் பாதிப்பு ஏற்பட்டாலும் இந்நிலை ஏற்படும் ஆபத்துண்டு. அண்மையில் இதுபோன்ற சிக்கல் அரிசோனா விமானதளத்தில் விமானி களுக்கு ஏற்பட்டது.
“ஆக்சிஜன் போதுமான அளவு இல்லாதபோது, உடல், மனம் இரண்டின் ஒருங்கிணைப்பு வேகமாக குலையும்” என்கிறார் ஓஹியோ பல் கலைக்கழக அறிவியல் பேராசிரியர் ஜான் லேனுட்டி.
2008 ஆம் ஆண்டிலிருந்து ஹைபோக்ஸியா குறித்த புகார்களை உலகமெங்கும் போர்விமானிகள் கூறி வருகின்றனர். “இது தனி நோய் போன்றதல்ல. உடலின் சிக்கல்கள் அனைத்தும் ஒன்றுசேரும் நிகழ்வு” என்கிறார் ராணுவதள கமாண்டர் லூக். தற்போது இக்குறைபாட்டை சமாளிக்க விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
|