மீண்ட ஆஞ்சநேயர்!



அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் கலை மியூசியத்தில் இருந்த ஆஞ்சநேயர் சிலை இது. கம்போடியா நாட்டுக் கோயில் ஒன்றில் பத்தாம் நூற்றாண்டில் செதுக்கி வைக்கப்பட்ட சிலை. உள்நாட்டுப் போரின்போது யாரோ கடத்தல்காரர்கள் இதை அமெரிக்காவுக்கு விற்று விட்டனர். இப்போது கம்போடிய அரசு ஆதாரங்களைத் தந்ததும் சிலை மீண்டும் அந்த நாட்டுக்கே போகிறது.