யு.ஜி.சி. நிராகரித்த நுழைவுத்தேர்வு!



* செய்தித் தொகுப்பு

கல்லுாரிகளில் இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர்  சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற பரிந்துரையைப் பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி. நிராகரித்துள்ளது.சர்வதேச அளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா  தாக்கத்தால் தாமதமாகியுள்ள பல்கலை, கல்லுாரித் தேர்வுகள் மற்றும் புதிய மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஹரியானா மத்திய பல்கலையின் துணைவேந்தர், குகாத் தலைமையிலான நிபுணர் குழுவை, மத்திய அரசு அமைத்தது.இந்த குழுவினர், பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து, யு.ஜி.சி.,யிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
நிபுணர் குழுவின் அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்து புதிய கல்வி ஆண்டுக்கான உத்தேச கால அட்டவணையை, யு.ஜி.சி., வெளியிட்டது.



அதேபோல பிளஸ் 2 முடித்தோருக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்க்க வேண்டும் என நிபுணர்குழு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை நிராகரித்த யு.ஜி.சி. ‘முந்தைய ஆண்டுகளைப் போல், இளநிலைப் பட்டப்படிப்பில் மாணவர்களைச் சேர்க்கலாம்’ என, அறிவித்துள்ளது. ஏற்கனவே, மூன்று ஆண்டுகளுக்கு முன், எஞ்சினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ. அறிவித்த பரிந்துரையை, இதுவரை செயல்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.