பட்டதாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை! 573 பேருக்கு வாய்ப்பு



வாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் கிளை நீதிமன்றங்களில், பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 573 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.பணியிடங்கள் விவரம்

1.கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
(Computer Operator)     - 76
2.தட்டச்சர் (Typist)     - 229
3.உதவியாளர் (Assistant)      - 119
4.வாசிப்பாளர் / ஆய்வாளர்
(Reader / Examiner)     - 142
5.ஜெராக்ஸ் ஆப்பரேட்டர்
(Xerox Operator)     - 7

கல்வித் தகுதி: குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, ஏதேனும் ஒரு துறையில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளங்கலை (டிகிரி) பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு

1. வாசிப்பாளர் / ஆய்வாளர், ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் போன்ற பணிகளைத் தவிர மற்ற பணிகளுக்கு கணினி சான்றிதழ் படிப்பு அவசியம் பெற்றிருத்தல் வேண்டும்.

2. கம்ப்யூட்டர் ஆபரேட்டர், தட்டச்சர் போன்ற பணிகளுக்கு தட்டச்சு பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம்.
வயது வரம்பு: பொதுப் பிரிவினர் 01.07.2019 தேதியின்படி 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவராக இருத்தல் வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ஓபிசி பிரிவினர் 18 வயது முதல் 35 வயது வரையும், ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் பணிபுரிவோர் 18 வயது முதல் 45 வயது வரையும் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.7.2019.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ. 300, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர்/மாற்றுத்திறனாளிகள்/விதவைகள் போன்றோருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. வங்கிகள் மூலம் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் 2.8.2019.

மாத ஊதியம்

1. கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
        - ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை
2. தட்டச்சர்
    - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை
3. உதவியாளர்
    - ரூ.20,000 முதல் ரூ.63,600 வரை
4. வாசிப்பாளர் / ஆய்வாளர்
    - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை
5. ஜெராக்ஸ் ஆப்பரேட்டர்
    - ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை

தேர்வு செய்யப்படும் முறைகள்: எழுத்துத் தேர்வு, தனித்திறன் தேர்வு (Skill Test), வாய்மொழித் தேர்வு (Oral Test) மூலம் பணியமர்த்தப்படுவர்.
பணியமர்த்தப்படும் இடங்கள்: தேர்வு செய்யப்படுவோர், சென்னை உயர் நீதிமன்றத்திலோ, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையிலோ அல்லது சென்னை உயர் நீதிமன்றத்தின்கீழ் செயல்படும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலோ பணியமர்த்தப்படுவர்.மேலும் இதுகுறித்த முழு தகவல்களைப் பெற https://www.mhc.tn.gov.in/recruitment/docs/126_2019.pdf மற்றும் https://www.mhc.tn.gov.in/recruitment/docs/127_2019.pdf போன்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம்.