காசநோய் ஆராய்ச்சி மையங்களில் ஒப்பந்த அடிப்படை பணி !



* வாய்ப்பு

காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி மையம் சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டுவருகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில்  இதன் கிளை மையங்கள் செயல்படுகின்றன. தற்போது இந்த ஆராய்ச்சி மையத்தில் திட்ட தொழில்நுட்ப அதிகாரி(பி.டி.ஓ) டெக்னீசியன்  உள்ளிட்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 575 பேர் தேர்வு செய்யப்பட  உள்ளனர். நேரடி நேர்காணல் அடிப்படையில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்தப் பணியிடங்களில் ஆராய்ச்சியாளர் (கிரேடு-சி) பணிக்கு 23 இடங்களும், திட்ட தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு 69 இடங்களும்,  திட்ட உதவியாளர் பணிக்கு 46 இடங்களும், டெக்னீசியன் (கிரேடு-3) பணிக்கு 161 பேரும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 23  பேரும் டிரைவர் கம் மெக்கானிக் பணிக்கு 23 பேரும், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 46 பேரும், சீனியர் புராஜெக்ட் அசிஸ்டன்ட்  பணிக்கு 23 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக ஆராய்ச்சி மையத்திற்கு குறிப்பிட்ட அளவில் பணியிடங்கள்  ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி: முதுநிலை மருத்துவ படிப்புடன் பணியனுபவம் பெற்றவர்கள் ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட  தொழில்நுட்ப படிப்புகளில் இளநிலை முதுநிலை படித்தவர்கள் 12ம் வகுப்பு படிப்புடன் தட்டச்சுத் திறன் பெற்றவர்கள்,  பி.எஸ்சி.படித்தவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிரைவிங் லைசென்ஸ் பெற்றவர்களுக்கு பணிவாய்ப்புகள் உள்ளன. அந்தந்த  பணிவாய்ப்புக்கான சரியான வயது வரம்பு,  கல்வித்தகுதி விவரங்களை இணையதளத்தில் பார்க்கவும்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 40 வயது உடையவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.  வயது வரம்பு தளர்வும் மத்திய அரசு விதிகளின்படி பின்பற்றப்படுகிறது.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இதற்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். இந்த நேர்காணல் 27.2.2019 வரை நடைபெற  உள்ளது. நேர்காணல் நடைபெறும் இடங்கள், என்றென்று எந்த பணிக்கான நேர்காணல் நடைபெறும் என்பது உள்ளிட்ட முழு  விவரங்களையும் www.nirt.res.in/ www.icmr.nic.in ஆகிய இணையதளங்களில் பார்க்கவும்.