இந்திய ராணுவத்தில் சேர அரிய வாய்ப்பு!
வாய்ப்பு
இந்திய ராணுவம் மிகப் பெரிய வரலாற்று பின்னணியைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டுவரும் அமைப்பு. நம் தேசத்தின் பாதுகாப்புப் பணியில் சிறந்த படைத்திறன், தொழில்நுட்ப ரீதியான அணுகுமுறை, பிரம்மாண்டமான எண்ணிக்கையிலான வீரர்கள் ஆகியவற்றுடன் இந்திய ராணுவம் முத்திரை பதித்து வருகிறது. இந்தியாவின் முக்கிய 3 படைகளில் ஒன்றான இந்திய ராணுவம் சர்வதேச நாடுகளிலும் புகழ்பெற்று விளங்குகிறது. இந்திய ராணுவம் உலக அளவில் அதன் திறனுக்காக அறியப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாகவும், படை பலம் மூலமாகவும் சிறப்பு பெற்றது.
ராணுவத்தில் சேர்வது பல இளைஞர்களின் லட்சியமாக இருப்பதற்குக் காரணமும் இந்த சிறப்புகள்தான். இவ்வளவு பெருமைகளைக் கொண்டுள்ள இந்திய ராணுவத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள்: இந்திய ராணுவத்தில் சோல்ஜர் பிரிவில் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல்,ஏவியேஷன் அண்டு அம்யூனிஷன் எக்சாமினர், நர்சிங் அசிஸ்டென்ட், நர்சிங் அசிஸ்டென்ட் வெர்டினரி,கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிகல், இன்வென்டரி மேனேஜ்மென்ட், டிரேட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு: 1995 அக்டோபர் 1ம் தேதிக்கு பின்பும் - 2001 ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பும் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஜெனரல் டியூட்டி பிரிவுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடனும், டெக்னிக்கல் பிரிவுக்கு பிளஸ் 2 படிப்பை கணிதம், இயற்பியல் பாடங்களுடன் படித்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதே தகுதியே இதர பிரிவுகளுக்கும் தேவை என்றபோதும், பிரிவைப் பொறுத்து டெக்னிக்கல் தகுதிகள் தேவைப்படும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ சோதனை அடிப்படையில் தேர்ச்சி நடக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.8.2018. மேலும் விவரங்களுக்கு http://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற லிங்க்கை பார்க்கவும்.
|