செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

அரசுப் பள்ளிகளில் புதிய சீருடை!

பள்ளிக்கல்வித் துறை வரும் கல்வி ஆண்டில் 9, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ -மாணவிகளுக்கு தனித்தனி சீருடையை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சாம்பல் நிற பேன்டும், இளஞ்சிவப்பு கோடிட்ட மேல் சட்டையும் மாணவிகளுக்கு சுடிதாருடன் கூடிய சாம்பல் நிற கோட்டும் சீருடையாகிறது. அதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு கருநீல பேண்டும், கருநீல நிற கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு சுடிதாருடன் கூடிய கருநீல கோட்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. 9 முதல்
பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகள் தங்கள் சொந்த செலவில் சீருடைகளை வாங்கிக்கொள்ள வேண்டும்.

தனியார் பள்ளிகளில் வேலை தேடும் ஆசிரியர்களுக்குப் புதிய செயலி!

தனியார் பள்ளிகளில் வேலை தேடும் ஆசிரியப் பட்டதாரிகள் தனியார் பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள் ஆகியோருக்கு பயன்படும் வகையில், மிகச் சுலபமாக்கிட FIND TEACHER POST தனது புதிய ANDROID APPஐ வெளியிட்டுள்ளது. அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களும் தங்கள் செல்லிடபேசியில் வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான APP இதுவாகும். ஏற்கனவே FIND TEACHER POST-ல் பதிவு செய்துள்ளவர்களும் கண்டிப்பாக இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். FTP-ன் பழைய APP பயன்படுத்துபவராக இருந்தால் அதை UNINSTALL செய்துவிட்டு புதிய APPஐ INSTALL செய்துகொள்ளலாம். உங்கள் MOBILE PHONE ல் GOOGLE PLAY STORE க்குச் சென்று findteacherpost என Type செய்து FIND TEACHER POST  APPஐ INSTALL செய்துகொள்ளலாம்.

பள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குநர்கள் மாற்றம்!

தமிழக பள்ளிக் கல்வித்துறை மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர் உமா மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறைக்கு மாற்றப்பட்டார். அங்கு பணிபுரிந்த இணை இயக்குநர் வாசு பள்ளிக்கல்வித் துறையில் உள்ள நாட்டுநலப்பணித் திட்டத்திற்கு மாற்றப்பட்டார். நாட்டுநலப் பணி திட்ட இணை இயக்குநர் செல்வக் குமார் மாற்றப்பட்டு அனைவருக்கும் கல்வித் திட்ட இணை இயக்குநராக பதவி ஏற்கிறார். அனைவருக்கும் கல்வித் திட்ட இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் பள்ளிக்கல்வித் துறை மேல்நிலை கல்வி இணை இயக்குநராக பதவி ஏற்கிறார். இதற்கான உத்தரவைப் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் பிறப்பித்துள்ளார்.

புதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை!

மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான, புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, டிப்ளமோ மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வழங்கப்படும் படிப்புகள்: கலை, அறிவியல், சட்டம், மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில் பி.ஜி.,டிப்ளமோ முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் பிஎச்.டி, படிப்புகள்.

கல்வித் தகுதி: தேர்வு செய்யப்படும் படிப்பிற்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். முதுநிலை மற்றும் பி.ஜி.,டிப்ளமோ படிப்பிற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இளநிலைப் பட்டத்தில் 55% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி, படிப்பிற்கு முதுநிலைப் பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: ஆன்லைன் நுழைவுத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 100 மல்டிப்பில் சாய்ஸ் கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 24.4.2018
மேலும் விவரங்களுக்கு : www.pondiuni.edu.in