+2 முடித்தவர்கள் துணை ராணுவப் படையில் சேரலாம்!



வாய்ப்பு

487 பேருக்கு வாய்ப்பு!


இந்திய ராணுவத்தில் பல படைப் பிரிவுகள் உள்ளன. இதில் மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை சுருக்கமாக சி.ஐ.எஸ்.எஃப். என்று அழைக்கப்படுகிறது. மத்திய துணை ராணுவப் படைப் பிரிவுகளில் ஒன்றான இந்தப் படைப் பிரிவில் தற்போது கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 487 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...  
கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 11.1.2018-ம் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் அளவுத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் இந்தக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 11.1.2018ம் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ளவும் https://cisfrectt.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.