கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் ஆக SET-2017 தகுதித் தேர்வு



தகுதித் தேர்வு

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், உதவிப் பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, ‘நெட்’ மற்றும் மாநில அளவிலான, ‘செட்’ தேர்வுகளில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும். ‘நெட்’ தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும் எந்தப் பல்கலையிலும் பணியில் சேரலாம்.’செட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றால், எந்த மாநில, ‘செட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றனரோ, அந்த மாநில கல்லுாரிகளில் மட்டுமே பணியில் சேர முடியும். ‘நெட்’ தேர்வை, ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் எழுதலாம். தமிழக, ‘செட்’ தேர்வில், ஆங்கிலம் அல்லது தமிழில் தேர்வு எழுதலாம்.

 தமிழகத்தில், ‘செட்’ தேர்வானது, கடந்த ஆண்டு முதல், கொடைக்கானல் தெரசா பல்கலை மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, ஏப்ரல் 23ல் நடக்கும் என, ‘செட்’ தேர்வு கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும், 16 பொறுப்பு மையங்கள் மூலம், 25 பாடங்களுக்கு தேர்வு நடக்க உள்ளது. 

கல்வித்தகுதி: முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மர்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு எழுதியிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் முதுநிலைப் பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்களும், எம்.பி.சி., பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 50% மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.tnsetexam2017mtwu.ac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்பாக வழிகாட்டி குறிப்புகளை முழுமையாக படித்துக்கொள்ளவும். பொதுப்பிரிவினர் ரூ.1500ம், பி.சி., எம்.பி.சி. ரூ.1250ம், எஸ்.சி., எஸ்.டி. ரூ.500ம் தேர்வுக் கட்டணமாக கிரெடிட்/டெபிட்/நெட் பேங்கிங் மூலமாக செலுத்தவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.3.2017.

ரூ.300 தாமத கட்டணத்துடன் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.3.2017
மேலும் கூடுதல் விவரங்களை மேலே குறிப்பிட்டுள்ள இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.