1200 பேருக்கு வாய்ப்பு!
இந்தியாவின் சர்வதேச வங்கி என அழைக்கப்படும் பாங்க் ஆஃப் பரோடா, 3082 கிளைகளைக் கொண்டது. இந்த வங்கியில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பரோடா வங்கி, மணிப்பால் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஓராண்டு வங்கிப் பணிகள் பயிற்சி கொடுத்து இந்தப் பணியிடங்களை பூர்த்தி செய்கிறது. பயிற்சி முடிவில் விண்ணப்பதாரர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மொத்தம் 1200 பேர் இந்தப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி: Probationary Officers in Junior Management Grade, ScaleI I
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 25,700
பயிற்சி வகுப்பு: Diploma in Banking and Finance
பயிற்சி காலம்: 1 வருடம்
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஊனமுற்றோர் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 17.03.2015 தேதியன்று 20 வயது பூர்த்தியடைந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 18.3.1987 மற்றும் 17.3.1995 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். வழக்கமாக மத்திய அரசுப் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் உடல் ஊனமுற்றோருக்குத் தரப்படும் வயது சலுகைகள் இதிலும் தரப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.600. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100. இதனை கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை குறிப்பிட்ட அளவுக்கு ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 17.03.2015
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.04.2015
கூடுதல் விவரங்களுக்கு: www.bankofbaroda.com