இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) எனப்படும் தொலைத்தொடர்பு நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் ஜூனியர் அக்கவுன்ட்ஸ் ஆபீஸர் (யிகிளி) காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்வதற்குரிய போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்: 962
சம்பள விவரம்: மாதம் 16,400/- முதல் 40,500/-
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்.காம். பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட அமைப்பில் சி.ஏ., காஸ்ட் அண்ட் ஒர்க்ஸ் அக்கவுன்டன்ட் அல்லது கம்பெனி செக்ரட்டரிஷிப் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 2015 ஜனவரி 1 அன்று 20-30க்குள் இருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அரசு விதிமுறைகளுக்குட்பட்ட வயது வரம்புச் சலுகை உண்டு.
போட்டித் தேர்வு: அகில இந்திய அளவில் நடைபெறும் எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். போட்டித் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. முதல் தாளில் ஆங்கிலம், பொது அறிவு, அடிப்படைக் கணிதம் ஆகியவை பற்றிய அறிவும், இரண்டாம் தாளில் நிதி நிர்வாக அறிவும் சோதிக்கப்படும் வகையில் கேள்விகள் அமைந்திருக்கும். இரண்டு தாள்களுக்கும் தலா மூன்று மணி நேரம் கால அவகாசம் தரப்படும். இரண்டு தாள்களும் சேர்ந்து மொத்த மதிப்பெண்கள் 450.
தேர்வு நடைபெறும் நாள்: 22.02.2015
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களும் இதர
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் ரூ. 1000/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே கட்ட இயலும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வுக் கட்டண விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: http://www.externalexam.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தபிறகு அதனை பிரின்ட் அவுட் எடுத்து, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, கையொப்பமிட்டு கிஞிவிமிழி/பிஸி பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2014.
கூடுதல் விவரங்களுக்கு: http://www.bsnl.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.