கவிதைக்காரர்கள் வீதி
பெ.பாண்டியன்
* பாப்பாவுக்கு சோறூட்ட காட்டும் வேடிக்கையில் திரும்பும் அம்மாவின் பால்யத்தை ரசித்திருக்கிறீர்களா?
* ஜக்கம்மாவிடம் கேட்பதேயில்லை எந்த குடுகுடுப்பைக்காரனும் தன் எதிர்காலத்தை!
* எல்லோருக்கும் பிடித்த உணவு மிச்சமிருப்பதில்லை எப்போதும் அம்மாவுக்கு!
* அழிந்த வயல்களில் நிசப்தமாய் ஒலிக்கிறது நடவுப் பாட்டு!
* பூ விற்கும் கிழவியின் புன்னகையில்தான் எத்தனை பூக்கள்!
* பேரம் பேசி வாங்கப்பட்ட நடைபாதைக் கடையொன்றின் பழங்களில் கண்ணீர் சுவை!
* களைப்பாய் வந்தமர்ந்த பறவைக்கு பெருமரத்தின் இலைகளே விசிறியாகி விடுகின்றன!
* பூட்டிய வீட்டினுள்ளே நிசப்தம் குடியிருக்கிறது!
|