தத்துவம் மச்சி தத்துவம்
‘‘டாக்டர்! அந்த பேஷன்ட் ஆபரேஷன் முடிஞ்ச அப்புறம் ஓடலாமான்னு கேட்கறாரு...’’ ‘‘தாராளமா ஓடலாம்னு சொல்லுங்க நர்ஸ்...’’ ‘‘நீங்க வேற டாக்டர்! ‘நாம ரெண்டு பேரும் ஓடலாமா’ன்னு என்கிட்ட கேட்கறாரு!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்?’’ ‘‘ஜெயில்ல போடற சாப்பாட்டுக்கும் டிப்ஸ் கேட்கறாங்களாம்!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
மண் சட்டி மண்ணுல செய்வாங்க, இரும்புச் சட்டி இரும்புல செய்வாங்க. அப்ப தீச்சட்டி தீயிலயா செய்வாங்க? - தலைமைக்காக தீச்சட்டி எடுக்கும் தீவிரவாதிகள் சங்கம் - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘‘தெம்புக்கு டானிக் எழுதித் தந்திருக்கேன். அதுக்கு முன்னாடி இந்த மாத்திரையைப் போட்டுக்குங்க!’’ ‘‘ஏன் டாக்டர்?’’ ‘‘அந்த பாட்டிலோட மூடியைத் திறக்க தெம்பு வேணாமா... அதுக்குத்தான்!’’ - அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.
‘‘டாஸ்மாக் கடையில காவலுக்கு நிக்கற போலீஸ்காரர், ஏன் அந்தக் ‘குடி’மகனை கண்டபடி திட்டறார்?’’ ‘‘கடையில பாதுகாப்பு குடுத்தா போதாது! குடிச்சிட்டுப் போனா மனைவி அடிக்கிறா... வீட்டுக்கும் வந்து பாதுகாப்பு குடுங்கன்னு கேட்டானாம்!’’ - ம.விருதுராஜா, திருக்கோவிலூர்.
‘‘டாஸ்மாக் கடையை இடம் மாற்றணும்னு தலைவர் போராடுறாரே... ஏன்?’’ ‘‘அவர் வீட்ல இருந்து இது ரொம்ப தூரத்துல இருக்காம்!’’ - அம்பை தேவா, சென்னை-116.
டாக்டர் நோயாளிகளுக்கு பி காம்ப்ளக்ஸ் மாத்திரை எழுதிக் குடுப்பார். அவர் கிளினிக் வச்சிருக்கிற காம்ப்ளக்சையே எழுதிக் குடுப்பாரா? - கம்பவுண்டரிடம் டோக்கன் வாங்கி நர்ஸ்களிடம் கடலை போடுவோர் சங்கம் - டி.செல்வன், நெல்லையப்பபுரம்.
தத்துவம் மச்சி தத்துவம்
ஏன்யா! உனக்குத்தான் கை, கால் நல்லா இருக்கே... ஏன் பிச்சை எடுக்கறே?’’ ‘‘நீங்க கொடுக்கற ஒரு ரூபாய்க்காக நான் கை, காலை உடைச்சுக்கணுமா?’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘டாக்டர், என் புருஷன் குடியை மறக்க மருந்து குடுக்கலைன்னாலும் பரவாயில்லை. சைடு டிஷ்ஷை மறக்க மருந்து குடுங்க...’’ ‘‘ஏன்?’’ ‘‘நூறு ரூபா குவாட்டருக்கு முன்னூறு ரூபாய்க்கு சைடு டிஷ் சாப்பிடுறார்!’’ - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
செல்போன் கோபுர உச்சியில் எதுக்கு ஏறினே..?’’ ‘‘யாருடைய தொந்தரவும் இல்லாம தண்ணி அடிக்கத்தான் எசமான்..!’’ - அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.
நான் கொடுக்கிற மருந்தை நீங்க சாப்பாட்டோட சேர்த்து சாப்பிடணும்...’’ ‘‘இதுக்குப் பேருதான் சோத்துல விஷம் வைக்கிறதா, டாக்டர்?’’ - யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
‘‘தன்னை விசாரிக்க வந்த சி.பி.ஐ அதிகாரிகள் கிட்ட தலைவர் என்ன கேட்டார்?’’ ‘‘2016 தேர்தல்ல ஜெயிக்க டிப்ஸ் கேட்டாராம்!’’ - அம்பை தேவா, சென்னை-116.
ஸ்பீக்கரு...
தொண்டர்களே! என் மீது நீங்கள் செருப்பு வீசுவதை நான் எதிர்க்கவில்லை. அதை ஜோடியாக வீசாமல் ஒன்றை மட்டும் வீசினால் அதை வைத்து நான் என்ன செய்வது? மீதி ஒன்றை வைத்து நீங்கள்தான் என்ன செய்ய முடியும்? யோசியுங்கள். வீசுங்கள்...’’ - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
என்னதான் தரையைக் கண்டாலே படுக்க ஆசையா இருந்தாலும், புளியோ‘தரை’ மேல படுக்க முடியுமா? - சோம்பல் முறிக்கக் கூட சோம்பேறித்தனப்படுவோர் சங்கம் - கோ.சு.சுரேஷ், கோவை.
|