கவிதைக்காரர்கள் வீதி

தொலைந்தது திருவிழாவில் தொலைந்துபோன குழந்தைகள் இன்னமும் தேடுகின்றன தொலைந்து போன திருவிழாக்களை! - நா.கி.பிரசாத், கோவை.
குழந்தை வரம் கடவுளைக் கடவுளிடமே வரமாகக் கேட்கிறோம். - கா.சிவபாலன், கட்டுமாவடி.
தேடல் எங்கே அவர்கள் என்று கேட்டபடி வியாபாரியிடமிருந்து பிரிந்து குழந்தைகளைத் தேடி ஓடுகின்றன கடற்கரையில் பலூன்கள் - அக்னிபுத்ரன், சென்னை.
கவலை பெய்யும் மழை பிடிக்கவில்லை குழந்தையின் கவலை மூழ்கும் கப்பல் - மா.கண்ணன், ராஜபாளையம்.
மனசு ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை குழந்தைகளுடன் விளையாடும்பொழுது! - இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.
ரகசியம் ஏதோ ஒரு ரகசியத்தை என் காதில் சொல்லிவிட்ட சந்தோஷம் குழந்தைக்கு ஒன்றும் புரியாத அவஸ்தை எனக்கு! - ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
|