எம்.ஜி.ஆருக்கு ஒருவிதமாகவும் சிவாஜிக்கு ஒருவிதமாகவும் தன் குரலை மாற்றி
மூன்று தலைமுறை தாண்டிப் பாடிய டி.எம்.எஸ்ஸுக்கு டாக்டர் பட்டம் போன்ற
எந்தப் பட்டங்களும் தராதது பெரிய சோகம்தான். நல்லதொரு கலைஞனை வாழும்
காலத்திலேயே கொண்டாடும் நாள் என்று வரும்?
- உமா மோகன்தாஸ், திண்டுக்கல்.
மூன்று தலைமுறைகளைக் கடந்து, 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி, இன்று
உடல்நலம் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய டி.எம்.எஸ். நலமுடன் வாழ இறைவனை
வேண்டுகிறேன்.
- அ.பால்ராஜ், கொத்தாம்பாடி.
‘முதல்வர் ஒரு சர்வாதிகாரி - கொதிக்கும் அமைச்சர் யார்? என்று பரபரப்புடன்
பக்கங்களைப் புரட்டினால், அது மேற்கு வங்காள மேட்டர் என்பதை அறிந்ததும்
‘சப்’ என்றாகிவிட்டது. ஆனாலும், உமக்கு குறும்பு அதிகம்தான்!
-அய்யாறு வாசுதேவன், சென்னை-14.
‘தொழிலில் உண்மை, கடுமையான உழைப்பு இவை இரண்டும் இருந்தால் பிறகு எல்லாம்
தானாகவே கிடைக்கும்’ என்ற நல்லி குப்புசாமி செட்டியாரின் அனுபவ வார்த்தைகள்
உயர்வுக்கு வழி காட்டும் உன்னதமான வெற்றி மந்திரம்!
- கஸ்தூரி, காட்பாடி.
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ‘இயல்’ விருது வழங்கப்பட்டிருப்பது
இலக்கியத்திற்குப் பெருமை. ‘எழுத்துதான் எனது வாழ்க்கை’ என்கிற அவரது
தன்னடக்கமான தாரக மந்திரம் அவரை இன்னும் உயரத்திற்குக் கொண்டு செல்லும்.
- கா.சரவணன், சிதம்பரம்.
ரூபாய் 5 லட்சம் வரை மாத சம்பளம் பெற இருந்த ரூசோ இப்படி மாறியது
அதிசயம்தான்! கண்டிப்பாக அவருக்கு வெற்றி கிடைக்கும். அவர் நிதர்சனமான ரோல்
மாடல்தான்!
- வே.முருகேசன், சென்னை-88.
என்னைக்குமே நடிகனுக்காக கதை இல்லை. நான் நடிகனா தெரிவதே படைப்புகளாலதான்’ என்கிற பிரகாஷ்ராஜ் டைரக்டராகவும் ஜெயிக்கட்டும்!
- வி.என்.கதிர்வேல், வேலூர்-6.