comeகா!



வாமிகா கபியை நினைவிருக்கிறதா?

செல்வராகவனின் ‘மாலைநேரத்து மயக்கம்’ ஹீரோயின் இவர். சண்டிகரில் பிறந்த பஞ்சாபி பால்கோவா. கதக் டான்ஸர் என வாமியின் வால்யூம்கள் அதிகம். அவரது அப்பா ஓர் எழுத்தாளர். அம்மா கல்வியாளர்.
ஒரே ஒரு தம்பியோ, வளரும் நடிகர்.இந்த டீடெயில் எல்லாம் எதற்குத் தெரியுமா? தமிழில் எஸ்.ஜே.சூர்யாவின் ‘இறவாக் காலம்’ படத்தில் நடித்து வருகிறார் வாமிகா.  சமீபத்தில் மலையாளத்தில் பிருத்விராஜ் தயாரித்து நடித்த ‘9’ படத்தின் மூலம் மல்லுவுட்டிலும் தனது கொடியை பறக்கவிட்டிருக்கும் வாமி, பஞ்சாபியிலும் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

மை.பா