மெய்சிலிர்ப்பு!



திருக்குவளை மைந்தராக, பெரியாரின் விரல்பிடித்து அண்ணாவின் பாதையில் மக்களுக்கு பாடுபட்ட கலைஞரின் திரும்பிப் பாராத வாழ்வும் திறனும் மெய்சிலிர்ப்பு.
- மனோகா, திருச்சி; ராஜ்குமார், குன்னூர்; கைவல்லியம், மானகிரி; சத்தியநாராயணன், அயன்புரம்; முத்துவேல், கருப்பூர்.

சைபர் தடயவியல் நூல் எழுதியுள்ள ஐஜி முருகனின் தடயக்கதைகள் திகில் பிரமிப்பு.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

மக்களின் மேலுள்ள அக்கறையில் மன்னிப்பு கேட்டு பேசினாலும் தன்னடக்கமாக தாக்கம்
ஏற்படுத்தியுள்ளார் நம்மவர் கமல்!
- மகிழை சிவகார்த்தி, புறத்தாக்குடி;

ராஜ்குமார், குன்னூர்; முத்துவேல், கருப்பூர்; கைவல்லியம், மானகிரி; மாணிக்கவாசகம், கும்பகோணம்; சந்தியா, கே.கே.நகர்.
ஜம்மென்ற ஷேப்பில் லவ் லாட்டரியாக நிவேதா கையில் விழுந்தால் விஜய் ஆண்டனி ‘திமிரு பிடிச்சவனா’கத்தான் நடந்துகொள்வார் என
புரிந்துகொள்ள மாட்டேன்கிறீர்களே!
-ஆர்.ஜெசி, சென்னை.

பாழடைந்து போன பாலாற்றின் நிலை பரிதவிப்பு தந்தது.
- பாக்கியவதி, மேக்காமண்டபம்; முருகேசன்,கங்களாஞ்சேரி; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

‘கலெக்டர்ஸ்’ பகுதியில் நியூஸ் ரீடர் ரத்னாவின் கலெக்‌ஷன்ஸ் கண்ணைக் கவர்ந்தது.
- பாக்கியவதி, மேக்காமண்டபம்; முத்துவேல், கருப்பூர்; அஞ்சுகம், கருப்பூர்; மயிலைகோபி, அசோக்நகர்; ஜெசி, மடிப்பாக்கம்.

உடலின் ஹார்மோன் சமநிலையை உடைக்கும் பிளாஸ்டிக் தடை அதி அவசியம் என உணர்ந்தோம்.
- இ.லட்சுமி, திருவண்ணாமலை; சிவசிதம்பரம், திருச்சி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

கூத்துக் கலைஞர்களின் மீது தீராத பிரியம் கொண்ட போட்டோகிராபர் பிரபு காளிதாஸ் அனுபவங்கள்
ஆச்சரியம்.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; சம்யுக்தா, மடிப்பாக்கம்.

‘பூ’, ‘தனித்திருந்த இரவு’ என இரு கவிதைகளும் அறைக்கதவருகே கடலாய் ஆச்சரியப்படுத்தின.
- எம்.சேவுகப்பெருமாள்,பெருமகளூர்; முத்துவேல், கருப்பூர்; சண்முகராஜ், திருவொற்றியூர்.

ரசிகர்களின் மனதை புதுமையாக படம் பிடித்துவிட்டது இயக்குநர் நவீனின் ‘அலாவுதீனின் அற்புதக்கேமரா’.
- சரண் சுதாகர், கே.கே.நகர்.

பழைய சென்னப்பட்டிணத்தின் வரலாற்றை ‘தலபுராணம்’ நேர்த்தியாக விளக்கியது.
- கைவல்லியம், மானகிரி; மாளவிகா, மேற்குமாம்பலம்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசுபதவியை விட்டு விலகி சிவகாசி நாடார் மெஸ்ஸைத் தொடங்கிய முத்தையா நாடாரின் லட்சியம் சுவையோடு மனங்களையும் வென்றிருக்கிறது.
- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; முருகேசன், கங்களாஞ்சேரி; அஞ்சுகம், கருப்பூர்.