மோடி பெயரில் மோசடி!



தில்லியைச் சேர்ந்த நந்தி கிஷோர் சின்கா தன் தந்தையின் விபத்து செலவுக்கு அரசு உதவி கிடைக்குமா என்று இணையத்தில் தேடி வந்தார்.  அப்போது கிடைத்த இணையதளம் அவரது வாழ்வில் மறக்கமுடியாத மோசடி பாடத்தைக் கற்பித்தது.

மோடி சுகாதார திட்டம் என்ற பெயரில் இருந்த கடன் இணையதளத்தில் அப்ளிகேஷனை சிரத்தையாக நிரப்பி அனுப்பினார். உடனே சுதீர் ஜோஷி  என்பவர் தொடர்புகொண்டு ஆதார், வங்கிக்கணக்கு விவரங் களோடு வங்கி பரிவர்த்தனை கட்டணமாக ரூ.1.39 லட்சத்தை பேசிப் பேசியே  கறந்துவிட்டார். பின்னர் சுதாரித்த சின்கா போலீசில் புகார் அளித்தபின்தான் நிறையபேர் மோடி மோசடி பிளானில் ஏமாந்துள்ளனர் என  தெரியவந்துள்ளது. இம்மோசடியில் ஈடுபட்ட மாயூர் விகாரிலுள்ள எட்டுப்பேரை போலீஸ் சைபர்செல் கைது செய்துள்ளது.

ரோனி