ரயிலைக் காணோம்!



ஸ்பெஷலாக சில விஷயங்கள் நடக்கும். அதில் முக்கியமானது திருட்டு! பல்பு, சேர், கம்ப்யூட்டர், நகைகள், பணம்... என நுட்பமாகத் திருடி  ஆச்சரியப்பட வைப்பார்கள்.

இதையெல்லாம் இந்த நிகழ்வு தூக்கிச் சாப்பிட்டிருக்கிறது! ஜார்க்கண்டிலுள்ள ராஞ்சி ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு. அங்கு நின்றிருந்த பிரீமியம்  எக்ஸ்பிரஸ் ரயில்களான ராஜ்தானி மற்றும் சம்பர்க் ஆகிய இரண்டு ரயில்களின் கோச் பெட்டிகளில் சிலவற்றை காணவில்லை! எங்கு போனது எப்படி  மாயமானது என நிலைய மேலாளர் மாதா, பிதாவை மனதில் வேண்டி கூகுளில் தேடியும் கோச் பெட்டிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளூர்  கொள்ளை குழுக்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என புகாரைப் பெற்ற போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.                                         

ரோனி