பிரியாணி விலை, பகீர் கொலை!
மேற்கு வங்காளத்தில் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பிரியாணி கடை நடத்தி வந்தார் சஞ்சய் மோன்டல்.
பரபரப்பான இரவு வியாபாரத்தின்போது முகமது ஃபெரோஸ் உட்பட நான்குபேர் வந்து விலை கேட்காமல் நான்கு பிளேட் பிரியாணி தின்றனர். பிளேட் விலை தலா ரூ.190 என பில் வந்தவுடன் ஷாக் ஆனவர்கள், ஓனர் சஞ்சயுடன் வாக்குவாதம் செய்யத் தொடங்கினர். ஒருகட்டத்தில் கூட்டத்தில் ஒருவரான முகமது ஃபெரோஸ், சட்டென துப்பாக்கி எடுத்து சஞ்சயின் நெஞ்சில் சுட்டுவிட்டார்.
நொடியில் எஸ்கேப்பான கேங்கில் பிடிபட்டது கொலையாளி முகமது ஃபெரோஸ் மட்டுமே. ‘‘ஃபெரோஸுடன் வந்த ராஜா, மோக்ரி, சல்மான் ஆகியோர் குண்டர்கள். இனி எப்படி கடையை நடத்தப் போகிறோமோ?’’ என பதறுகிறார் சஞ்சயின் சகோதரர். பிரியாணி பணத்துக்காக கொலை என்பதை நம்பாத போலீஸ் வேறு மோட்டிவ் உள்ளதா என விசாரித்து வருகிறது.
ரோனி
|