கடனைக் கேட்டால் நாக்கை வெட்டு!



உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரஜாபால், தான் கொடுத்த கடனை வட்டியும் முதலுமாக வாங்க சத்தர்சிங் வீட்டுக்குச் சென்றார்.

கடனைத் தரமறுத்த சத்தர்சிங் தன் உறவினர்களோடு சேர்ந்து பிரஜாபாலின் நாக்கை கத்தியால் அறுத்து எறிந்தார். இது தொடர்பாகக் கொடுத்த புகாரின்  மீது போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரஜாபால் குடும்பம் கண்ணீர் வடிக்கிறது. ஆனால், ‘‘நினைவிழந்து கிடந்த பிரஜாபாலை  நாங்கள்தான் மருத்துவமனையில் சேர்த்தோம். அவரைத் தாக்கிய சத்தர்சிங் மீது புகார் பதிவு செய்துள்ளோம்!’’ என்கிறது போலீஸ் தரப்பு. எது  எப்படியோ, நாக்கை இழந்து தவிக்கிறார் கடன் கொடுத்த பிரஜாபால்.

ரோனி