உள்ளாடையில் காதல் செய்தி!



மகாராஷ்டிராவின் பிவாண்டி பகுதியில் துவைத்து காயப்போடும் பெண்களின் உள்ளாடைகள் மின்னல் வேகத்தில் களவு போய்க் கொண்டிருந்தன. அதற்கான காரணத்தை போலீஸ் கண்டுபிடித்துள்ளது! திருடு போன உள்ளாடை பெண்ணுக்கு திரும்ப கிடைத்தபோது அதில் எழுதியிருந்த காதல் மெசேஜை வைத்து திருடரை பிடித்து விட்டனர்.

மாயுரேஷ் பாட்டீல் என்பவர்தான் அந்த அதிநுட்ப திருடர். உள்ளாடை திருடுபோன பெண் ஒருவர் கொடுத்த வாய்மொழி புகாரின் அடிப்படையில் காதல் மன்னர் மாயுரேஷை கைது செய்த நாரிபோலி போலீஸ் அவரை என்கொயரி செய்து வருகிறது. அதே ஏரியாவில் திருடுபோன பிற உள்ளாடைகளின் கதி என்ன, அதிலும் காதல் மெசேஜ்கள் எழுதப்பட்டிருந்ததா என்பதையும் போலீஸ்படை ஆராய்ந்து வருகிறது.                                     

- ரோனி