மீண்டும் உலக நிதி நெருக்கடி?!



தனி நாடுகளின் ஏற்றுமதி, இறக்குமதிகளால் நேரும் பணவீக்கம் என்பதைத் தாண்டி உலகநாடுகள் பெற்றுள்ள கடன் 164 ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்துள்ளதாக உலக நிதிக்கழகம் (IMF) எச்சரித்துள்ளது. இப்போது உலகிலுள்ள உள்நாட்டு உற்பத்திக்கு எதிராக அரசு மற்றும் தனியாரின் கடன் அளவு விகிதம் 225% (2016) என்பதை தன் அறிக்கையில் நிதிக்கழகம் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது. ‘‘எல்லை மீறிய அளவு இது.

மேலும் இது அதிகரிக்கும்போது நாடுகளின் வணிகத்தில் நிதிப்பேரழிவு நிகழும்...’’ என்கிறார் உலக நிதிக்கழகத்தின் பணவீக்கத்துறையைச் சேர்ந்த விட்டர் காஸ்பர். நிதிச்சீரழிவுகளிலிருந்து அமெரிக்கா மெல்ல இப்போதுதான் மீண்டு வருகிறது. இந்நிலையில் இப்படியொரு வார்னிங்கை உலக நிதிக்கழகம் கொடுத்துள்ளது.    

- ரோனி