ராணுவ வேலை வேண்டாம்!



ராணுவத்தில் சேருவது பெருமை என நினைத்த காலம் காலாவதியாகிவிட்டதா? கேட்க வைக்கிறது உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை.

கடந்தாண்டில் மட்டும் CRPF, BSF, ITBP, SSB, CISF உள்ளிட்ட படைகளைச் சேர்ந்த 14 ஆயிரத்து 587 வீரர்கள் தம் வேலையை ரிசைன் அல்லது விஆர்எஸ் கொடுத்து விலகி யிருக்கின்றனர். 2015ம் ஆண்டு வேலை விலகல் அளவு 3,422. இதில் பாரா மிலிட்டரி (நக்சலைட், ஜம்மு - காஷ்மீர்) மற்றும் எல்லை பாதுகாப்புப் படை (பாகிஸ்தான், வங்கதேச எல்லை) வீரர்களின் எண்ணிக்கை அதிகம். காரணம், இதைவிட வளமான வேலைவாய்ப்புகளும் உயிர்பயமற்ற வாழ்க்கையும் வெளியில் இருப்பதுதான். 2015ம் ஆண்டிலிருந்து கடந்த ஜனவரி 31 வரை பதவி விலகிய அதிகாரிகள் / வீரர்களின் எண்ணிக்கை 27,862.

ரோனி