குப்பையில் கரன்சி!



சீனாவின் லையோனிங் பகுதியைச் சேர்ந்த வாங் ஒருநாள் இரு பைகள் வாங்கினார். ஒன்று, குப்பை பேக். மற்றொன்று வங்கியில் கட்ட கரன்சி பேக். அவசரத்தில் குப்பை என நினைத்து கரன்சி பேக்கை தூக்கி குப்பைத்தொட்டியில் கடாசிவிட்டார்! வீடு வந்த பின்னர்தான் உண்மை தெரிந்திருக்கிறது. பதறி போலீசில் புகார் கொடுத்தார். அதற்குள் கரன்சி பேக் கிடைத்துவிட்டது.

எப்படி தெரியுமா? குப்பை சேகரிக்கும் பெண் ஒருவர், டஸ்ட்பின்னில் இருந்த அந்தப் பையை எடுத்து திறந்து பார்த்திருக்கிறார். உள்ளே பணத்தைக் கண்டதும் சமர்த்தாக அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டார். பைசா குறையாமல் போலீசாரும் அதை ‘வாங்’கிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்! 

- ரோனி