சாக்ஸுக்காக ஜெயில்!



பல்விளக்குவது, குளிப்பது, துணி துவைப்பது எல்லாம் அடிப்படை விஷயங்கள். இதையும் சரியாகச் செய்யவில்லை என்றால் என்னாகும்? பிரகாஷுக்கு நடந்ததுதான் உங்களுக்கும் நடக்கும். இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரகாஷ்குமார் பஸ் பயணத்தில் அதிரடியாக போலீசாரால் அரஸ்ட் செய்யப்பட்டுள்ளார். சாக்ஸை துவைக்காததுதான் காரணம்!

தில்லிக்கு பஸ்சில் வந்தபோது, பிரகாஷின் சாக்ஸ் நாற்றத்தால் டரியலான சக பயணிகள் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டனர். நாற்றம் பிடித்த சாக்ஸை கழற்றாமல் ஆர்க்யூமெண்ட் செய்து பொது அமைதியை நாஸ்தி செய்த க்ரைமில் லாக்கப்பில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கேயும் சாக்ஸை கழட்டலியா?!        

- ரோனி