பரிதாபத்தின் கைகள்



கனவுகளில் துரத்துகிறது
மருத்துவமனை வீச்சம்
நினைவடுக்குகளில் சுழல்கிறது
உன் உயிரின் ஓலம்
எனை நோக்கி நீளும்
மரண பயம் கொண்ட
பரிதாபத்தின் கைகள்
குற்றவுணர்வின் நிழலாய்

அழுத்துகிறது குரல்வளையை
திமிறிக் கலைந்து
எழுகையில் சூழ்கிறது
நீயற்ற வெறுமை
மனதின் இடுக்குகளில்
பெரு மூச்சொன்றை உதிர்த்தபடி
வெட்கம் கொண்டலைகிறது
என் இயலாமை.

- ஸ்ரீதேவி மோகன்