போன் பப்ளிசிட்டி!



- ரோனி

ஆண்ட்ராய்டின் பட்ஜெட் ஆரவாரங்களையும் தாண்டி ஐபோன் தனக்கான மார்க்கெட்டை எலைட் லெவலில் வைத்திருப்பதை மகாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த வாலிபர் பேண்ட் வாத்தியங்களை வாசித்துக் காட்டி நிரூபித்துவிட்டார். இந்தியாவில் நவம்பர் மாதம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட ஆப்பிள் X போனை க்யூவில் நின்று ஆர்டர் செய்த தானே பகுதி வாலிபர், அதனை எப்படி வாங்கச் சென்றார் என்பதுதான் பிரேக்கிங் நியூஸ்.

குதிரையில் ஐபோன் புக்கிங் அட்டையோடு ஊர்வலமாகப் போய், பேண்டு வாத்தியங்களை புக் பண்ணி இசைத்து செம கிராண்டாய் கடையில் வாங்கியிருக்கிறார். பப்ளிசிட்டிதான் என்றாலும் கிராண்ட் பேக்கேஜாக நடத்தியதால் ஒரே நாளில் சோஷியல் தளங்களில் ஓஹோ புகழ்பெற்றுவிட்டன வாலிபரின் ஸ்டில்கள்.