சரக்கு வேட்டை!



- ரோனி

முன்பு விபத்தானால் அடிபட்டவரை தூக்குவார்கள். இன்று அடிபட்டவரை விட்டுவிட்டு அவரின் காஸ்ட்லி வண்டியை சிராய்ப்பின்றி தூக்கி நிறுத்துவது காருண்யமாகி இருக்கிறது. அப்படித்தான் தெலுங்கானாவில் ஒரு ஆக்சிடென்ட். அங்கு சிச்சுவேஷன் என்ன தெரியுமா? வேமுலப்பள்ளி ஷெட்டிப்பாலம் ஜங்ஷன். ரோட்டில் நல்ல வேகத்தில் வந்து கொண்டிருந்த டாஸ்மாக் சரக்கு லாரியின் குறுக்கே திடீரென நாய் வர, கருணையோடு டிரைவர் வலதுபுறம் ஸ்டீயரிங்கை திருப்ப, வண்டி குட்டிக்கரணம் போட்டது.

ஓட்டுநருக்கு ஒன்றுமில்லை என பெருமூச்சு விட்ட மக்கள், சிதறிய சரக்கு பாட்டில்களைப் பார்த்ததும் ஜெய் ஆல்கஹாலாய! என உற்சாகமாகி பெட்டி பெட்டியாக அபேஸ் செய்யத் தொடங்கிவிட்டனர். பீதியான டிரைவர் போலீசுக்கு நம்பர் தட்ட, அவர்கள் வந்து லத்தி சுழற்றி, கால்குலேட்டர் தட்டியபோது 350 பெட்டிகள் காணோம். மதிப்பு ஜஸ்ட் ரூ.50 ஆயிரம்!