டான்ஸ் இந்தியா டான்ஸ்!



இந்தியர்களுக்கும் பொழுதுபோக்குமான உறவு, இதயமும் அது பம்ப் செய்யும் ரத்தமும் போல. பிரிக்கவே முடியாது. உத்திரப்பிரதேசத்திலும் அப்படித்தான். ஜாலி டான்ஸில் கொலக்குத்து டான்ஸ் போட்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியா முழுக்க இது சர்ச்சையாகியுள்ளது! மிர்ஸாபூரில் திருவிழா நடந்தது. விழாவுக்காக அங்குள்ள தொடக்கப்பள்ளிக்கு லீவு கொடுக்கப்பட்டு, அதன் சாவியை பஞ்சாயத்து தலைவர் முதல்நாளே சூதனமாக வாங்கி வைத்துவிட்டார். எதற்கு? தன்மகனின் பர்த்டே பார்ட்டகாகத்தான்.

அப்புறம் என்ன? அடுத்தநாள் அயிட்டம் கேர்ள்ஸ்களை கூட்டி வந்து பஞ்சாயத்து தலைவர் தன் மகனுக்கு பிறந்தநாள் பார்ட்டி டான்ஸ் நடத்தியதில் ஊரே மிரண்டு போனது. பிரச்னை பார்ட்டி அல்ல. நடத்திய இடம் ஸ்கூல் என்பதால் பலரும் ஷாக்காகி மூக்கு விடைக்க, கல்வி அதிகாரிக்கு பெட்டிஷனோடு வீடியோவையும் அட்டாச் செய்து அனுப்பிவிட்டனர். விசாரணையில் பிள்ளைகளுக்கு டான்ஸ் கிளாஸ் எடுத்தோம் என்று சொல்வார்களோ?!