2 ஆயிரம் பெண்களுக்கு அப்பா!



ஒரு பெண்ணுக்கு அப்பாவாக இருப்பதே இமாலய சாதனை. அப்படியிருக்க இங்கே ஒருவர் 2 ஆயிரம் பெண்களுக்கு தந்தையாகியிருக்கிறார்!

குஜராத்தைச் சேர்ந்த ஈஸ்வர் சதானி தன் பெண்ணுக்காக நகைவாங்கச்சென்றிருக்கிறார். விலையைக் கேட்டோ அல்லது இதய பிரச்னையாலோ அங்கேயே நெஞ்சுவலியால் இறந்துவிட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத்திற்கு தோள் கொடுத்து ஈஸ்வரின் இரு பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டார் அவரது சகோதரரும் வைர வியாபாரியுமான மகேஷ்.

‘தந்தையை இழந்த குடும்பத்திலுள்ள இளம்பெண்களும் இப்படித்தானே தவிப்பார்கள்..?’ என யோசித்தவர் சட்டென்று காரியத்தில் இறங்கிவிட்டார். ஏறத்தாழ 708க்கும் மேற்பட்ட தந்தையை இழந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். ‘‘எனக்கு பெண் குழந்தைகள் இல்லை. ஆனால், இன்று 2 ஆயிரம் பெண்கள் என்னை அப்பா என்று அழைக்கின்றனர்!’’ நெகிழ்ச்சியுடன் சொல்லும் மகேஷ், ஒரு திருமணத்துக்கு செய்யும் செலவு மட்டும் ரூ.4 லட்சம்!