நிலா...மழை...குழந்தை
கவிதை வனம்
* நிலவைக் காட்டி குழந்தைக்குச் சோறூட்டும் அம்மாக்கள் கவனிப்பதேயில்லை ஒவ்வொரு வாய்க்கும் நிலவும் வாய் திறப்பதை!
* மழையில் குடை பிடித்து வீடு வந்து சேர்ந்ததும் அடம் பிடித்துக் குடை மடக்கிய குழந்தையின் முகத்தில், மழை பொழிந்த வானத்தை மடக்கியதன் மலர்ச்சி
-மகிவனி
பட்டாம் பூச்சியின் மரணம்
அருகில் விரைந்த கார் கதவிடுக்கில் சிக்கிய பட்டாம்பூச்சி படபடப்பது காற்றின் துடிப்பா? உயிரின் தவிப்பா? அய்யோ! நெடுஞ்சாலைகளில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டவர் யார்?
-லாவண்யா சுந்தரராஜன்
|