பூட்டிய அறையிலிருந்து தப்பிய ஜெனரல்!



-த.சக்திவேல்

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் வசித்துவரும் கேம்பெல் கிரேட் ஆசை ஆசையாக பிரனீஸ் வகையைச் சேர்ந்த ஒரு நாயை வளர்த்து வந்தார். கோடை விடுமுறையைக் கழிக்க குளிர்ப் பிரதேசங்களுக்கு செல்லத் திட்டமிட்டவர், தன் நாயை பாதுகாப்பான இடமான விலங்குகள் நல மருத்துவமனையில் விட்டுவிட்டுச் சென்றார். ஒரு நாள்... ஒரேயொரு நாள்தான் அந்த நாய் அங்கு தங்கியது. மறுநாள் எஸ்கேப் ஆகிவிட்டது. சிசிடிவி கேமராவில் பதிவான அக்காட்சிகள் காண்பவர்களை உறைய வைக்கின்றன.

ஏனெனில், நாய் இருந்தது நான்கு பக்கமும் பூட்டப்பட்ட கதவுகளைக் கொண்ட ஓர் அறையில். ஒருவராலும் அதைத் திறக்க முடியாது. இதையும் மீறி நாய் தப்பித்திருக்கிறது! விஷயத்தைக் கேள்விப்பட்டதும் விடுமுறையை கேன்சல் செய்துவிட்டு உடனே கேம்பெல் கிரேட் ஊர் திரும்பினார். வீட்டு வாசலை மிதித்தவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவரை வரவேற்க அந்த நாய் அங்கு நின்றிருந்தது! அந்த நாயின் பெயர் ‘ஜெனரல்’!